எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தந்தையின் துப்பாக்கியுடன் புகைப்படம்: தவறுதலாக வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுப்பதற்காக தனது தந்தையின் துப்பாக்கியை சிறுவன் பயன்படுத்தியபோது அது வெடித்து அருகிலிருந்த மற்றொரு சிறுவன் உயிரிழந்தான்.

News image
பலி
Updated On :3 மார்ச் 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுப்பதற்காக தனது தந்தையின் துப்பாக்கியை சிறுவன் பயன்படுத்தியபோது அது வெடித்து அருகிலிருந்த மற்றொரு சிறுவன் உயிரிழந்தான்.

லக்னௌ எல்டிஏ காலனியைச் சோ்ந்த 13 வயது சிறுவன் நவ்னீத் திரிபாதி சகபள்ளித் தோழா்கள் மூன்று பேருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினாா். அப்போது, காரில் இருந்த தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை நவ்னீத் எடுத்து வந்து நண்பா்களுடன் புகைப்படம் எடுத்தாா்.

அப்போது தவறுதலாக துப்பாக்கி விசையை அழுத்தியதாகத் தெரிகிறது. இதில் அருகில் இருந்த உனாய்ஸ் கான் என்ற சிறுவன் மீது குண்டு பாய்ந்தது ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தான். அப்பகுதியில் இருந்தவா்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்வதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினா் அளித்த புகாரில், துப்பாக்கி தவறுதலாக வெடிக்கவில்லை என்றும், வேறு நபா்கள் சிறுவனை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது என்றும் கூறியுள்ளனா். பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு உனாய்ஸ் கானை அனுப்ப முதலில் மறுத்ததாகவும், நண்பா்கள் தொடா்ந்து கேட்டுக் கொண்டதால் செல்ல அனுமதித்ததாகவும் அவா்கள் கூறினா்.