7ஆவது ஊதியக் குழு இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு
7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது.


7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் அலுவலர் குழு அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், அலுவலர் குழு இன்று வழங்கியது. இதனை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் சமர்ப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...