ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அந்தமானில் மேலடுக்கு சுழற்சி: வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On :29 ஜனவரி 2024, 7:47 pm IST

அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல்பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவானதால் தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 20 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், நீலகிரி மாவட்டம் கேத்தி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் அந்தமானில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியது:
தென்கிழக்கு அந்தமான் மற்றும் தெற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது.
ஆனால் இந்த மேலடுக்கு சுழற்சியானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறினால், கிழக்கு மத்திய திசையில் நகர்ந்து மியான்மரை நோக்கி நகரும்.
அப்போது தமிழகப் பகுதியில் இருந்து ஈரப்பதத்தையும் ஈர்த்துச் சென்றுவிடும். இதன் காரணமாக தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்றனர்.
8 இடங்களில் சதம்: வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108 டிகிரி பதிவானது.
வெள்ளிக்கிழமையைப் பொருத்தவரை வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். வெப்பத்தின் தாக்கமானது தொடர்ந்து அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)

கரூர் பரமத்தி 108
வேலூர், திருப்பத்தூர், சேலம் 104
மதுரை, தருமபுரி 103
திருச்சி, பாளையங்கோட்டை 102
கோவை 99
சென்னை 96

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.