ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மக்களின் பணம் எங்கே? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

பிரதமர் நிவாரண நிதி குறித்து அறிக்கை வெளியிட வலியுறுத்தி மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியிருப்பது பற்றி...

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 10:57 am IST

பிரதமர் நிவாரண நிதி குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "மக்கள் பணம் எங்கே பிரதமர் மோடி அவர்களே?

பொதுமக்களின் வியர்வைச் சிந்திய பணமும், அரசு ஊழியர்களின் சம்பளப் பங்களிப்பும் இணைந்து உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதமர் நிவாரண நிதி (PM Cares).

2022 - 23 ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ. 909.64 கோடி நன்கொடை உள்பட ரூ. 6,723.07 கோடி வரவு வந்த நிலையில், அதில் வெறும் ரூ. 439.38 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, மீதம் ரூ. 6,283.68 கோடி கையிருப்பில் உள்ளது.

2022 - 23க்கு பின் அறிக்கை வெளியிடப்படாதது ஏன்? அமைச்சர்கள் இருக்கும் அமைப்பிற்கு தகவல் அறியும் உரிமை பொருந்தாது எனக் கூறித் தப்பிப்பது ஏன்?

இதன் அறங்காவலர்களாக மத்திய அமைச்சர்கள் பொறுப்பில் இருக்கும்போது, சட்டப்படி பொது ஊழியர்களான அவர்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்.

எனவே,பிரதமர் நிவாரண நிதி நிச்சயம் தகவல் அறியும் உரிமை வரம்புக்குள்தான் வருகிறது. மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Manickam Tagore MP urges the Central Government to release a audit statements of PM Cares Fund

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.