இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பள்ளி மாணவர்கள் 1,300 பேர் பிரதமருக்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 1,300 பேர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினர். 

News image

காவிரி மேலாண்மை வாரியம் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவ, மாணவியர். 

Updated On :6 ஏப்ரல் 2018, 1:28 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 1,300 பேர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினர். 
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,300 பேர் அஞ்சல் அட்டை மூலம் கடிதம் அனுப்பினர். நீடாமங்கலம் தபால் நிலையம் மூலம் இந்த அஞ்சல் அட்டைகள் அனுப்பட்டன. இதுகுறித்து, மாணவர்கள் கூறியது: தங்களது பெற்றோர் விவசாயியாக இருப்பதால் காவிரி நீர் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். அதன்மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு எங்களை படிக்க வைக்க முடியும். எனவே, எங்களது எதிர்காலத்தை கருதி பிரதமர் நரேந்திரமோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.