காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 1,300 பேர் பிரதமர் மோடிக்கு வியாழக்கிழமை கடிதம் அனுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலம் நீலன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 1,300 பேர் அஞ்சல் அட்டை மூலம் கடிதம் அனுப்பினர். நீடாமங்கலம் தபால் நிலையம் மூலம் இந்த அஞ்சல் அட்டைகள் அனுப்பட்டன. இதுகுறித்து, மாணவர்கள் கூறியது: தங்களது பெற்றோர் விவசாயியாக இருப்பதால் காவிரி நீர் இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். அதன்மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு எங்களை படிக்க வைக்க முடியும். எனவே, எங்களது எதிர்காலத்தை கருதி பிரதமர் நரேந்திரமோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தேர்தல்: வடகிழக்கில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு!

பிகார் மேலவைத் தேர்தல்: 10 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு!






