மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

முழு அடைப்புப் போராட்டம்: தமிழகம் - கர்நாடகம் இடையே போக்குவரத்து நிறுத்தம்

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையிலான போக்குவரத்து வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.

Updated On :6 ஏப்ரல் 2018, 1:25 am IST

தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக தமிழகம் - கர்நாடகம் இடையிலான போக்குவரத்து வியாழக்கிழமை நிறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக கூடலூரில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லும் பயணிகள் வாகனப் போக்குவரத்து உள்பட அனைத்து வகைப் போக்குவரத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. 
கர்நாடகத்தில் இருந்து வந்த பயணிகள் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களையும் கக்கநல்லா பகுதியில் உள்ள கர்நாடக எல்லைக்குள்ளேயே கர்நாடக போலீஸார் தடுத்து நிறுத்தினர். 
அதேபோல, கூடலூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் பயணிகள் பேருந்துகள் உள்பட அனைத்துப் போக்குவரத்துகளையும் தமிழக எல்லையான தொரப்பள்ளியில் தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இருமாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்து நடைபெறவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.