தஞ்சை: ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல், பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று கொட்டும் மழையில் நனைந்தபடி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
கடந்த சனிக்கிழமை மாலை திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரி உரிமை மீட்புப் பயணத்தை தொடங்கிய திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சியினர், 3வது நாளாக தஞ்சையில் பயணத்தைத் தொடங்கினர்.
தஞ்சையில் கொட்டும் மழையில், திரண்டிருந்த ஏராளமான பொதுமக்களிடையே பேசிய மு.க. ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தூங்குவது போல் நாடகமாடுகிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குவது போல நடிப்பவர்களை எப்போதுமே எழுப்ப முடியாது.
மோடி அரசுக்கு ஏற்ப தமிழக அரசும் செயல்படுகிறது. ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது பழமொழி. அது போல, பிரதமர் மோடிக்கு ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று புதுமொழி சொல்லலாம் என்று ஸ்டாலின் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லாபம் 28% வளர்ச்சி

கால்பந்து களம்...

பெரம்பலூா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

பாவேந்தா் பாரதிதாசன் சிலைக்கு மாலை அணிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


