11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகள்: கோரிக்கைகளை அளிக்கலாம்

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:06 am IST

ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவிடம் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைவது தொடர்பாக நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ. சித்திக் தலைமையில் ஒருநபர் குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஏழாவது ஊதியக் குழு தொடர்பான முரண்பாடுகள், பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் மனுதாரர்களிடம் தனிப்பட்ட முறையிலான குறை கேட்புகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, முரண்பாடுகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை ஒருநபர் குழுவிடம் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி: omc_2018@tn.gov.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.