குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை

எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 1:42 am IST

எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இங்கிலாந்தின் பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலர் மற்றும் 44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் பெயரில் முதலீடு செய்ததாக டிடிவி தினகரன் மீது கடந்த 1996-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நியச் செலாவணி வழக்குப்பதிவு செய்தது. இதே போல் ஐரோப்பிய நாடுகளில் ஹோட்டல் தொடங்குவதற்காக பார்க்லே வங்கியில் 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் 1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 
இந்த இரண்டு வழக்குகளின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. பார்க்லே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் சார்பில் முதலீடு செய்தது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஏற்கெனவே உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் தன் மீதான மற்றொரு வழக்கின் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பார்க்லே வங்கியில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான முதல் வழக்கின் அடிப்படையில்தான் இரண்டாவது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. எனவே இரண்டு வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. முதல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது வழக்கை தனியாக விசாரிக்கக் கூடாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர், வழக்கை இழுத்தடிக்கவே டிடிவி தினகரன் ஒவ்வொரு மனுவாக தாக்கல் செய்கிறார். எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக அமலாக்கத் துறை வரும் ஜூன் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் அதுவரை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் டிடிவி தினகரன் மீதான மற்றொரு வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.