ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பதவி உயர்த்தப்பட்ட ஏ.டி.எஸ்.பி.களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழக காவல்துறையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட 30 ஏ.டி.எஸ்.பி.களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. 20 ஏ.டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:34 am IST

தமிழக காவல்துறையில் அண்மையில் பதவி உயர்த்தப்பட்ட 30 ஏ.டி.எஸ்.பி.களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. 20 ஏ.டி.எஸ்.பி.கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக காவல்துறையில் சுமார் 51 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏ.டி.எஸ்.பி.) பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் காவல்துறையில் நிர்வாக ரீதியாகவும், பணி ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டது. அதே வேளையில் காவல்துறையில் ஏ.டி.எஸ்.பி.யாக இவ்வாண்டு பதவி உயர்வு பெறுவதற்கு 16 டி.எஸ்.பி.கள் மட்டுமே தகுதி உடையவர்களாக இருந்தனர். 16 பேரையும் ஏ.டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு செய்தாலும், முக்கியமான ஏ.டி.எஸ்.பி. பணியிடங்கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் தகுதியுடைய 16 டி.எஸ்.பி.களுக்கு,அடுத்த நிலையில் இருந்த 35 டி.எஸ்.பி.களையும் ஏ.டி.எஸ்.பி.களாக பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. 
அதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்திலும் காவலர் சிறப்புச் சட்டத்தில் சிறு, சிறு மாற்றங்களைச் செய்து, 51 டி.எஸ்.பி.களுக்குப் ஏ.டி.எஸ்.பி.களாகப் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் உள்துறை கடந்த 7-ஆம் தேதி உத்தரவிட்டது.
இவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் 30 பேருக்கு பணியிடங்களை ஒதுக்கி புதன்கிழமை தமிழக அரசின் உள்துறை உத்தரவிட்டது.
இதேபோல மாநிலம் முழுவதும் 20 ஏ.டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. புதிய பணியிடங்களில் ஏ.டி.எஸ்.பி.கள் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.