திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெண் கைதிகளுக்கு இலவச நாப்கின்: பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அழைப்பாணை

திருச்சி பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு கடந்த 2016-இல் இருந்து அரசின் இலவச நாப்கின்கள் வழங்கப்படாத விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:13 pm

DIN

திருச்சி பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு கடந்த 2016-இல் இருந்து அரசின் இலவச நாப்கின்கள் வழங்கப்படாத விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை அழைப்பாணை அனுப்பியது.
சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் திருச்சியில் உள்ள பெண்கள் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 27) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்தச் சிறையில் உள்ள கைதிகளுக்கு தமிழக அரசின் இலவச நாப்கின்கள் வழங்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளரிடம் நீதிபதி டி.ஜெயச்சந்திரன் கேட்டபோது, சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம், நோய்த் தடுப்புத் துறைதான் இலவச நாப்கின்களை வழங்கி வந்தது. ஆனால், திடீரென நாப்கின்கள் வழங்குவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அழைப்பாணை: தமிழக அரசு சார்பில் திருச்சி பெண்கள் சிறைக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த நாப்கின்களை நிறுத்தியது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநரும், திருச்சி மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநரும் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மே 15-ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஏடிஜிபிக்கு விளக்கம் கோரி நோட்டீஸ்: திருச்சி பெண்கள் சிறையில் நாப்கின்கள் வழங்கப்படாததற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், தமிழகத்தின் மற்ற பெண்கள் சிறையில் இலவச நாப்கின்கள் வழங்கப்படுவதன் நிலை குறித்தும் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சிறைத் துறை ஏடிஜிபிக்கு மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.