சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பேருந்தில் கடத்தப்பட்ட 11 கிலோ தங்கம் பறிமுதல்

ராமநாதபுரத்திலிருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் மதுரையில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:54 pm IST

ராமநாதபுரத்திலிருந்து பேருந்தில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் மதுரையில் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் திருச்சி வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் திருச்சி மண்டலப் பகுதியில் விமான நிலையம் மற்றும் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 
அதன்படி புதன்கிழமை இரவு மதுரை விரகனூர் சுற்றுச்சாலை பகுதியில் பேருந்துகள் மற்றும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ராமநாதபுரத்திலிருந்து சென்னை சென்ற பேருந்தில் 3 பயணிகள், சந்தேகத்துக்கிடமான வகையில் பெரிய அளவிலான தோள் பைகளை வைத்திருந்தனர். அதனை சோதனையிட்டதில் சுமார் 11.15 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றின் மதிப்பு ரூ. 3. 32 கோடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.