இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

2ஜி: அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஆக.14-க்கு ஒத்திவைப்பு

  2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Updated On :7 ஆகஸ்ட் 2018, 1:29 am IST

  2ஜி வழக்கில் தொடர்புடைய அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
இந்த வழக்கில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அமலாக்கத்துறை துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதிபதி நாஜ்மி வஜீரி அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், நீதிபதி விடுப்பில் இருந்ததால் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக  கோர்ட் மாஸ்டர் தெரிவித்தார். 
2 ஜி வழக்கில் குற்றம்சாட்டுள்ளப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி  ஆகியோருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு  மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.