கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ராஜாத்தி அம்மாளிடம் பணிவு.. கனிமொழிக்கு ஆசி.. ஸ்டாலினுக்கு ஆறுதல்: மோடியின் அஞ்சலி நிமிடங்கள் 

உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:27 pm

DIN

சென்னை: உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி  செலுத்தி வருகின்றனர் 

இந்நிலையில் உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர் ஹெலிகாப்டர் மூலம் ராஜாஜி அரங்கை வந்தடைந்தார்.  அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய அமைச்சர்கள் பொன்னார் , நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பாஜக  தலைவர் தமிழிசை ஆகியோர் உடன் வந்தனர்.

அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு  ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தார்கள்.   

வந்தவர் கருணாநிதி உடல் அடங்கிய பேழைக்கு மலர் வளையம்  வைத்து, வணக்கம் தெரிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உடலுக்கு அருகில்  நின்றிருந்த கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளின் கைகளைப் பிடித்து, கண்களில் ஒற்றி ஆறுதல் கூறினார். பின்னர் அவரது மகள் கனிமொழியின் தலையில் கை வைத்து, ஆறுதல் கூறி பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர் அங்கிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் சென்றவர் சிறிது நிமிடங்கள் தோளில் தட்டி பேசிக் கொண்டிருந்தார். பின்னர் முன்னர் வந்து பொதுமக்களை பார்த்து கை கூப்பினார். பிறகு திரும்பிச்செல்லும் வழியில் நடக்கத் துவங்கியவருடன் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் உடன் சென்றனர்.

பின்னர் மீண்டும் இருவருடனும் மோடி தனியாக நின்று தீவிரமாக பேசிக்கொண்டிருந்தார். அதன் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.