கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

கொடைக்கானல் குறிஞ்சித் திருவிழா ஒத்திவைப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறவிருந்த குறிஞ்சித் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கொடைக்கானலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 11) நடைபெறவிருந்த குறிஞ்சித் திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள், கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிகழாண்டு அதிக அளவில் பூத்துள்ளன. 
குறிஞ்சி மலர்களை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக, குறிஞ்சித் திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் இந்த திருவிழா நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மறைவையொட்டி, தமிழக அரசு 7 நாள்கள் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. அதனால் சனிக்கிழமை நடைபெறவிருந்த கோடை குறிஞ்சித் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சித் திருவிழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.