
மருத்துவத்தைவிட நோய்த் தடுப்பு முக்கியம்: சுகாதாரத் துறை செயலர்
மருத்துவ முன்னேற்றங்களைக் காட்டிலும் நோய் தடுப்பே மிகவும் முக்கியம் என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். குவாலிட்டி ஹெல்த் நிறுவனத்தின் சார்பில்,

மருத்துவ முன்னேற்றங்களைக் காட்டிலும் நோய் தடுப்பே மிகவும் முக்கியம் என்று தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். குவாலிட்டி ஹெல்த் நிறுவனத்தின் சார்பில், கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான உடல்நலம் குறித்த பயிலரங்கம்சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 1900 -களிலேயே தமிழகத்தில் பொது சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பல்நோக்கு மருத்துவமனைகள் வரை நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அனைத்து மருத்துவ முன்னேற்றங்களைக் காட்டிலும் நோய்த் தடுப்பு என்பதே மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. நோய்களற்ற நலமான வாழ்க்கைக்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவுக் கட்டுப்பாடு ஆகியவை முக்கியப் பங்களிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் நலம், மன நலம், சமூக நலம் ஆகியவை மிகவும் முக்கியம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 900 -க்கும் மேற்பட்ட வாழ்வியல் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளும் முழு உடல்பரிசோதனை மிகவும் அவசியம். முழு உடல் பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்வோர், கூடுதல் மருத்துவ ஆலோசனைகளுக்கும், நம்பகத்தன்மையான ஆலோசனைகளுக்கும் அரசு மருத்துவமனைகளை நாடலாம் என்றார் அவர். மருத்துவமனைகளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் கிரிதர், பிரிட்டன் தேசிய சுகாதார சேவைகளின் பொது சுகாதார இயக்குநர் டாக்டர் சக்தி கருணாநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






