சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்: கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில

News image
Updated On :20 டிசம்பர் 2018, 4:35 am


சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்பின்போது ஸ்டெர்லைட் விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து சி.வி.சண்முகத்துடன் பாலகிருஷ்ணன் பேசியதாகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரியதாக கூறப்படுகிறது. இதனிடையே  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என பாலகிருஷ்ணன் தெரிவித்தாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.