மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

காவி மண் தாமரையை மலர வைக்கும்: தமிழிசை சௌந்தரராஜன்

காவி மண் தாமரையை மலர வைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 டிசம்பர் 2018, 2:47 pm IST

காவி மண் தாமரையை மலர வைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் திருச்சியில் கருஞ்சட்டை மாநாடு நடந்தது. அதில் பேசிய சுப.வீரபாண்டியன் கரிசல் மண்ணில் கரும்பு முளைக்காது, தமிழகத்தில் தாமரை எந்நாளும் மலராது என்று பேசினார். 

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் திருப்பூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
பிரிவினை பேசுபவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை, இது காவி மண். காவி மண்ணை அழித்து கரிசல் மண் என்றால், அதனை அப்புறப்படுத்தி
காவி மண் தாமரையை மலர வைக்கும். 

கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின், ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை?. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக வலுப்பெறாது, ஸ்டாலினின் நகர்வு தவறானது. இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.