மதுரைக் கோட்டத்துக்குள்பட்ட ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை- மண்டபம் இடையே டிசம்பர் 24ஆம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மண்டபத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், நண்பகல் 12 மணிக்கு மதுரை வந்தடையும்.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து டிசம்பர் 24ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், மாலை 6.30 மணிக்கு மண்டபம் சென்றடைகிறது. இதேபோல், மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில், இரவு 11.40 மணிக்கு மதுரையை அடைகிறது.
ஆனால், மதுரையிலிருந்து டிசம்பர் 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேசுவரம் - திருப்பதி விரைவு ரயில் (வண்டி எண்-16780) அன்று நள்ளிரவு 12.15-மணிக்கு புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









