ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

கொடைக்கானலில் பயங்கர விபத்து: பள்ளத்தில் உருண்ட கார்; தூக்கி வீசப்பட்டு ஒருவர் பலி

கொடைக்கானலில் இருந்து பழனி சென்று கொண்டிருந்த கார், கோம்பைக்காடு அருகே சாலையோர மலைப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததல் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST


கொடைக்கானலில் இருந்து பழனி சென்று கொண்டிருந்த கார், கோம்பைக்காடு அருகே சாலையோர மலைப் பள்ளத்தில் உருண்டு விழுந்ததல் ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

புது வருடத்தைக் கொண்டாட திருச்சூரில் இருந்து 7 பேர் காரில் கொடைக்கானல் வந்து, அங்கிருந்து பழனிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் கொடைக்கானல் - பழனி சாலையில் கோம்பைக்காடு என்ற இடத்தில் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இதில், காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒருவர் மரக்கிளையில் சிக்கி பலியானார். காரில் இருந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காரில் வந்த 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

மலைப்பகுதியில் கார் உருண்டு விழுந்ததால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.