

உள்ளாட்சிச் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது புதிய பெயரில் இயங்கவும், குக்கர் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் எனக் கோரி டி.டி.வி. தினகரன் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் பிப்ரவரி 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.