

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்வதற்காக, புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அந்த மாநிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு பிரசாரப் பணிகளில் ஈடுபட புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி மேகாலயாவில் 3 நாள் பிரசாரம் மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
பிற்பகலில் மேகாலயா சென்றடைந்த அவர், பிரசாரப் பணிகளை உடனடியாகத் தொடங்கினார்.
செவ்வாய்க்கிழமை வரை பல்வேறு பிரசாரப் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளார். அன்றிரவே முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி திரும்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.