வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண் மாவோயிஸ்டுகள், வழக்குரைஞருக்கு பிப்.19 வரை காவல் நீட்டிப்பு

கரூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான மாவோயிஸ்ட்டுகள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு பிப்.19 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 8:13 pm

DIN

கரூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரான மாவோயிஸ்ட்டுகள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு பிப்.19 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளை தெருவில் பதுங்கியிருந்த சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா (53), சந்திரா (46) ஆகிய இருவரையும் க்யூ பிரிவு போலீஸார் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
மதுரை மாவட்டம் ஆலங்குளம் அன்பு நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனை கைது செய்தனர். கைதான பெண் மாவோயிஸ்டுகள் மற்றும் வழக்குரைஞர் முருகன் ஆகியோர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நீதிபதி நம்பிராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பிப்.19 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.