ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பத்திரப் பதிவுக்கான இணையதளம் தொடக்கம்

ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 11:04 pm

DIN

ஆன்லைன் மூலம் பத்திரப் பதிவு செய்யும் திட்டத்துக்கான இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் தங்களது ஆவணப் பதிவு தொடர்பான தேவைகளை விரைவாக பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஒருங்கிணைந்த இணையதள அடிப்படையிலான மென்பொருள் தயாரிக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி ரூ.176.44 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 திட்டத்துடன், அதற்காக மேம்படுத்தப்பட்ட www.tnreginet.gov.in இணையதளமும் வடிவமைக்கப்பட்டது. இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 
இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே பொதுமக்கள் இணையவழியில் ஆவணங்களை உருவாக்குதல், உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே இணையவழியாக அனுப்பி சரிபார்த்தல், அலுவலக வருகைக்கு முன்பதிவு செய்தல், ஆவணங்களை 10 நிமிஷத்தில் பதிவு செய்து ஒரே வருகையில் திரும்ப வழங்குதல் போன்றவற்றை இந்த இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம்.
மின்னஞ்சலில் ஆவண நிலை: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் வாயிலாக, ஆவண நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
ஆள்மாறாட்டம் தடுப்பு: இணைய வழி கட்டணம் செலுத்தும் முறை, ஆவணப்பதிவின்போது மோசடிப் பத்திரப் பதிவுகளைத் தவிர்க்க, முந்தைய ஆவணதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புதல், அவரின் கைரேகையை ஒப்பீடு செய்து ஆள்மாறாட்டத்தைத் தடுக்கும் புதிய வசதி, கட்டணமில்லா தொலைபேசி வழி பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் மனுக்களை இணையவழியில் உடனுக்குடன் வருவாய்த் துறைக்கு அனுப்பி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி, ஒப்புகை சீட்டு அனுப்பும் புதிய வசதியும் இந்த இணையதளத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
வில்லங்கச் சான்று: மேலும், இணையவழி கட்டணமில்லா வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்யும் வசதியானது 30 ஆண்டுகளிலிருந்து 42 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.