அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை: சரணடைந்த பினுவின் 'வடிவேல் டயலாக்'!

நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை என்று காவல்துறையினரிடம்  சரணடைந்த பினு தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

News image
Updated On :13 பிப்ரவரி 2018, 9:00 am

DIN

சென்னை: நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை என்று காவல்துறையினரிடம்  சரணடைந்த பினு தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

பிப்ரவரி 6ம் தேதி சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் நள்ளிரவில் நடத்தப்பட்ட ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அதிரடியாக காவல்துறையினர் சுற்றி வளைத்து, அதில் பங்குபெற்ற 76 ரவுடிகளை கைது செய்தனர். இந்தநிலையில், தப்பியோடி தலைமறைவான பினுவை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் செவ்வாயன்று காலை சரண் அடைந்தார். துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டதால் உயிருக்கு பயந்து காவல்துறையில் பினு சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. சரணடைந்த பினுவிடம், தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள ரவுடி பினு மீது, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல்நிலையங்களில் பினு மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ரவுடி பினு காவல்துறையினரிடம் அளித்துள்ள விடியோ வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

எனது பெயர் பினு. நான் பிறந்தது வளைந்தது எல்லாமே சென்னை சூளைமேட்டில்தான். எனக்கு ஐம்பது வயதாகிறது. எனக்கு சர்க்கரை நோய் உள்ளது.

நான் நிறைய ரவுடித்தனங்களில் ஈடுபட்டு வந்தேன். நிறைய முறை சிறைவாசம் அனுபத்திருக்கிறேன். பின்னர் திருந்தி வாழ ஆசைப்பட்டு மூன்றுவருடங்களாக தலைமறைவாக இருந்தேன். எனது தம்பிக்கு மட்டுமே நான் மறைந்திருந்த இடம் தெரியும். அவன்தான் என்னை 50-ஆவது பிறந்தநாள் கொண்டாடத்திற்கு அழைத்தான். அதனால்தான் இங்கு வந்தேன்.  

ஆனால் அங்கு போலீஸ் சுற்றி வளைத்து விட்டதால் ஒடித் தப்பித்து விட்டேன். நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை. என்னை மன்னித்து வாழ விட்டு விடுங்கள்.

இவ்வாறு பினு தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.