/

48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர்: கமலின் கட்சி இணையதளத்தில் பதிவு! 

நடிகர் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கான இணையதளத்தில் 48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 12:37 pm

சென்னை: நடிகர் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சிக்கான இணையதளத்தில் 48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான 'கூகுள் அனலிடிக்ஸ் டேட்டா' விபரங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டு கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

நடிகர் கமலின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியானது கடந்த 21-அம தேதி அன்று மதுரை ஒத்தக்கடையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், கமலால் அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைக்கப்பட்டது. அதே சமயம் மிகச்சரியாக அன்று இரவு 07.27 அன்று கட்சியின் இணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

சரியாக இணையதளம் துவங்கப்பட்டு 48 மணி நேரத்தில் 2 லட்சம் பேர் தளத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்தியா தவிர்த்து அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் இணையதளத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

ஆனால் பதிவு செய்து கொண்டுள்ளவர்களில் எத்தனை பேர் இந்தியாவில் வாக்குரிமை பெற்றுள்ளவர்கள் என்பது குறித்து விபங்கள் தெரியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.