கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளித்ததாகப் பேச்சு: பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளிக்கப்பட்டதாக பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

News image
Updated On :22 ஜனவரி 2018, 10:20 am

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளிக்கப்பட்டதாக பேசிய அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் சந்தேகங்களைப் போக்க என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையமானது ஜெயலலிதாவோடு தொடர்புடைய பல்வேறு நபர்களுக்கும் சம்மன்களை அனுப்பி விசாரித்து வருகிறது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'ஸ்லோ பாய்சன்' அளிக்கப்பட்டதாக, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன்  வெள்ளியன்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். இது தொடர்பான விடியோவானது சனிக்கிழமை அன்று வெளியாகி மிகுந்த பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையனுக்கு சம்மன் அனுபபி  விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.