டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் வகுப்புகள் நடத்தக் கூடாது: மெட்ரிக் இயக்ககம் உத்தரவு 

தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :4 ஜூலை 2018, 10:56 am

DIN

சென்னை: தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் புதனன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.

அதேசமயம் எந்த ஒரு நீட் சிறப்பு வகுப்பிலும் சேருமாறு மாணவர்களை பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.

அதேநேரம் நீட் சிறப்பு வகுப்புகளுக்கு என்று மாணவர்களிடம் பள்ளிகள் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது. 

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.