புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

118 அடியைக் கடந்த மேட்டூர் அணை: 20 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

118 அடியைக் கடந்து நிரம்பி வரும் மேட்டூர் அணை, முழுக்கொள்ளளவை எட்டினால் மொத்த உபரி நீரும் தொடர்ந்து விடுவிக்கப்படவுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2018, 4:51 am

DIN

118 அடியைக் கடந்து நிரம்பி வரும் மேட்டூர் அணை, முழுக்கொள்ளளவை எட்டினால் மொத்த உபரி நீரும் தொடர்ந்து விடுவிக்கப்படவுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த கன மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.  இதனால் இரு அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. 

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 64,595 கன அடியில் இருந்து 61,644 கன அடியாகச் சரிந்தது. 

இருப்பினும் சனிக்கிழமை காலை 114.63 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 118 அடியாக உயர்ந்தது. மேலும் விரைவில் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 88.73 டி.எம்.சியாக உள்ளது. இதனிடையே அணை நிரம்பினால் மொத்த உபரி நீரும் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.