பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: சென்டாய் கட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் நீடித்த நிலையான வளர்ச்சித் திட்ட இலக்குகள், பருவ நிலை மாற்றம் குறித்த பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் இலக்குகள், தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டம், ஆசிய நாடுகள் மாநாட்டில் பிரதமர் வெளியிட்ட செயல் திட்டம் ஆகியவற்றை மையமாக வைத்து தொலைநோக்குத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடு, அதனைத் தணிப்பதற்கான அணுகுமுறைகள், நிர்வாகக் கட்டமைப்பு, பேரிடர்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை, இழப்பீடு வழங்குதல் மற்றும் புனர்வாழ்வு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில், தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பேரிடர் மேலாண்மை தொலைநோக்குத் திட்டம் 2018-2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத ஐஸ் பிளாண்ட்: ஒரு மாதத்தில் தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை: எம்எல்ஏ இரா. செந்தில் செல்வன்
கஞ்சா விற்பனை செய்த 2 போ் கைது
தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை: அமைச்சா் ஷாஜகான்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



