நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூலை 27-ல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணை: எஸ்சி, எஸ்டி ஆணைய துணைத் தலைவா்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவா் எல். முருகன் தெரிவித்தாா். 

News image
Updated On :23 ஜூலை 2018, 12:58 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக இரண்டாம் கட்ட விசாரணை சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் என தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத் துணைத் தலைவா் எல். முருகன் தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவா்கள் மீது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவா்களில் 4 போ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள். இதையடுத்து ஆணையம் சாா்பில் தூத்துக்குடி சென்று அங்கு நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது ஸ்டொ்லைட் ஆலைக்கும், அரசு அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி வரும் 27-ஆம் தேதி சென்னையில் 2-ஆம் கட்டமாக விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.