திமுக ஆட்சியில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு கருணாநிதி அப்போதைய அதிமுக அரசால் கைது செய்யப்பட்டார். பின்னர் உடனே நீதிபதி அசோக் குமார் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த கடும் வாக்கு வாதங்களுக்குப் பிறகு ஜூலை 10-தேதி வரை கருணாநிதியை ரிமாண்டில் வைக்க வேண்டும் என்றும், கருணாநிதியின் குடும்ப டாக்டர் கோபால் தவிர, அரசு டாக்டர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அவரது உடல்நிலையை உடனடியாகச் பரிசோதிக்க வேண்டும் என்பதால், அவரை சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார்.