மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை: ட்விட்டரில் கிண்டல் செய்த ராமதாஸ் 

ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

News image
Updated On :4 ஜூன் 2018, 4:22 pm IST

சென்னை: ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் 7-ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இதற்கான ஆன்லைன் வழி முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு சாதாரண கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தற்பொழுது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏழைப் பங்காளனாக ரஜினிகாந்த் நடிக்கும் கொடுமை என்று காலா திரைப்பட முன்பதிவுக் கட்டணம் குறித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஜோரா கைத்தட்டுங்க 1! காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78க்கு பதிலாக ரூ.207.24க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்... ஏழைப் பங்காளன்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.