முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுப் பணிகள் ஒத்தி வைப்பு

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த மூவர் குழுவினரின் ஆய்வுப் பணிகள் ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 
Updated on
1 min read

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த மூவர் குழுவினரின் ஆய்வுப் பணிகள் ஜூன் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. 
முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை (ஜூன் 7) மத்திய அரசின் நீர் வளத்துறைச் செயலாளர் குல்சன்ராஜ் தலைமையில் தலைமை கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தனர். அதே நாளில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், கேரளத்தில் முழு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தனர். 
காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வேலை நிறுத்தம் அறிவித்த நாளில் அணையில் ஆய்வு நடத்தினால் சிக்கல் எழ வாய்ப்பு உள்ளதாக துணைக் குழுவில் இடம் பெற்றிருந்த கேரள பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த முல்லை பெரியாறு அணை ஆய்வுப் பணிகள் ஜூன் 21இல் நடைபெறும் என தலைமை கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. 
அதே வேளையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கட்சியினரும் வியாழக்கிழமை நடத்தப் போவதாக அறிவித்திருந்த முழுவேலை நிறுத்த போராட்டத்தை ஜூன் 30 ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com