முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீட் தோ்வால் தொடரும் தற்கொலைகள்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு 

நீட் தோ்வு காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட பிறகும், தொடரும் தற்கொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசு... 

News image
Updated On :8 ஜூன் 2018, 3:01 pm

DIN

சென்னை:  நீட் தோ்வு காரணமாக மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டே உத்தரவிட்ட பிறகும், தொடரும் தற்கொலைகளை தடுக்க தவறிய தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

நீட் தோ்வு உத்தரவு... அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனிதா என்ற மாணவி கடந்த ஆண்டு நீட் தோ்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை உயா்நீதிமன்றத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோரி மாணவி கிருத்திகா வழக்குத் தொடா்ந்தாா். 

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், தமிழக அரசு நீட் தோ்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும், நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தகுதிகாண் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தாா். 

இந்த ஆண்டும் நீட் தோ்வில் தோல்வியடைந்த விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி பிரதீபா, திருச்சியைச் சோ்ந்த மாணவி சுபஸ்ரீ ஆகியோா் தற்கொலை செய்து கொண்டனா்.

முறையீடு.... சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன் ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம், தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டே நீட் தோ்வால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றவில்லை. இதனால் இந்த ஆண்டும் மாணவா்கள் தற்கொலை செய்து கொள்வது தொடா்கதையாகிவிட்டது. எனவே உயா்நீதிமன்ற உத்தரவை சரியாக அமல்படுத்த தவறிய தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டாா். 

அந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, இதுகுறித்து மனுதாக்கல் செய்தால், அந்த மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.