பிரம்மா குமாரிகளின் அகில இந்திய நடமாடும் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

பிரம்மா குமாரிகள் இயக்கம் நடத்தும் "எனது பாரதம் பொன்னான பாரதம்" என்னும் தலைப்பில், அகில இந்திய (நடமாடும்) கண்காட்சி இளைஞர்
பிரம்மா குமாரிகளின் அகில இந்திய நடமாடும் கண்காட்சியை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

பிரம்மா குமாரிகள் இயக்கம் நடத்தும் "எனது பாரதம் பொன்னான பாரதம்" என்னும் தலைப்பில், அகில இந்திய (நடமாடும்) கண்காட்சி இளைஞர் பேருந்து பேரணியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று முகாம் அலுவலகத்தில், கொடியசைத்து துவக்கி வைத்தார். 

ஆக்கப்பூர்வ தன்மையின் அடிப்படையில் இளைஞர்களை சமுதாய மாற்றத்தின் முகவர்களாக ஆக்குவது, தூய்மையின் லட்சியத்தை மக்களிடம் பேணச் செய்தல், இளைஞர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலம் அறநெறிகளை வாழ்வில் கடைப்பிடிக்கச் செய்தல் ஆகியன பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இளைஞர் பிரிவின் சார்பில் நடைபெறும் இளைஞர் பேருந்து பேரணியின் நோக்கமாகும்.

பிரம்மா குமாரிகள் இயக்கத்தின், அகில இந்திய (நடமாடும்) கண்காட்சி இளைஞர் பேருந்து பேரணியைக் கொடியசைத்து துவக்கி வைத்து, அவர் ஆற்றிய உரையில், 

இந்நிகழ்ச்சியிலே பங்கு பெற்று, இந்நிகழ்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற அத்தனை நண்பர்களுக்கும், முதற்கண் எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றையதினம், துவக்கி வைக்கப்படுகின்ற இந்தப் பேருந்து, கிட்டத்தட்ட 40 நாட்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்குச் சென்று ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கின்றார்கள்.  

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, இளைஞர்கள் கிட்டத்தட்ட மொத்தம் 4 லட்சம் பேர் இந்தக் கண்காட்சியை கண்டு களிப்பார்கள் என்று இங்கே கூறியிருக்கின்றார்கள்.  அதிலே 3 லட்சத்து 80 ஆயிரம் இளைஞர்கள் பங்கு பெறுவார்கள் என்ற கருத்தையும் தெரிவித்திருக்கின்றார்கள். ஆகவே, இளைஞர்களுக்கு நல்ல ஒழுக்கம் கற்பிக்க வேண்டும்.  அந்த ஒழுக்கம் எவ்வாறு கற்பிப்பது என்பதைப் பற்றி விளக்கமாக, தெளிவாக, இங்கே இந்தப் பேருந்திலே, வரைபடத்தின் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆகவே, நாம் கடைப்பிடிக்கின்ற ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும், அப்படி அந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்கின்ற பொழுது, எப்படி மனம் தூய்மை அடையும், அகதூய்மை, புறதூய்மை எப்படி அடையப்படும், அதோடு நல்லொழுக்கம் எப்படிக் கிடைக்கும், மன நிம்மதி எப்படிக் கிடைக்கும், ஒரு வளமான வாழ்க்கை எவ்வாறு அமைத்துக் கொள்ளப்படும் என்ற ஒரு அற்புதமான செய்தியை இந்தப் பேருந்திலே வரைபடம் மூலமாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்ற விதத்திலே இந்தப் பணியை துவக்கியிருக்கின்றார்கள். அது வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் அமைச்சர், கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com