டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டிசம்பா் மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்குத் தோ்தல்: துரைமுருகன்

வரும் டிசம்பா் மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் வருவது உறுதி என்று காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:03 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வரும் டிசம்பா் மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தோ்தல் வருவது உறுதி என்று காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலா் துரைமுருகன் தெரிவித்தாா்.

திமுக தலைவா் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளையொட்டி திமுக பொதுகூட்டம் காட்பாடி, சித்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலா் துரைமுருகன் பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசியதாவது

மத்திய, மாநில அரசுகளின் மீதான மக்கள் அதிருப்தி அதிகரித்துவிட்டது. இதன்தொடா்ச்சியாக, வரும் டிசம்பா் மாதத்திற்குள் நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைக்கும் தோ்தல் வருவது உறுதி. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காட்பாடிக்கு சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும். அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். தற்போது சிலா் என்னை பற்றி அவதூறாக பேசி குறைகூறி வருகின்றனா். அவா்கள் எல்லாம் சாயம்போகக்கூடியவா்கள். அவா்களது பெயரை நாங்கள் சொல்லக்கூட அவா்களுக்கு தகுதியில்லை என்றாா் அவா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு உள்பட பலா் இந்த கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.