தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆனைமலை புலிகள் காப்பக அறைகளுக்கு இணையதள முன்பதிவு தொடக்கம்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அறைகளில் தங்க இணையதள முன்பதிவு வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 8:47 pm

DIN

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அறைகளில் தங்க இணையதள முன்பதிவு வசதி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 16 ஓய்வு இல்லங்கள், 2 டார்மெட்ரிகள் (கூடம்) உள்ளன. இதில் 100 பேர் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறைகளைப் பதிவு செய்ய பொள்ளாச்சியில் உள்ள அலுவலகத்துக்கு சுற்றுலாப் பயணிகள் நேரில் வரவேண்டி இருந்தது. 
இந்நிலையை மாற்ற இணையதள பதிவு முறை வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பகத் தலைமை வனப் பாதுகாவலர் கணேசன் இணையதளப் பதிவைத் தொடக்கிவைத்தார். www.atrpollachi.com என்ற இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.