

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
62 வயதாகும் தாயைப் பார்க்கவும் குடும்ப சொத்துகளை பிரிக்கும் பணிகளுக்காகவும் ரவிச்சந்திரன் தரப்பில் 1 மாத காலம் பரோல் கேட்டிருந்த நிலையில், 2 வார கால பரோல் வழங்கி மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரோல் காலத்தில் ஊடகங்களையோ அரசியல் கட்சித் தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.