பழனியில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 2004-ம் ஆண்டு 220 கிலோ எடையில் செய்யப்பட்ட ஐம்பொன்னால் ஆன அபிஷேக மூர்த்தி சிலை வைக்கப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, அந்த சிலை அகற்றப்பட்டு தனி அறைக்கு மாற்றப்பட்டது. இந்த சிலை தயாரிப்பில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போதைய கோயில் இணை ஆணையர் கேகே.ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையில் டிஎஸ்பி, கருணாகரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் பழனி பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொண்டனர். பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் உமா மற்றும் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கி விசாரணை மாலை 6 மணி வரை நடைபெற்றது.
அபிஷேக மூர்த்தி சிலைக்காக யாரிடம் இருந்து தங்கம் பெறப்பட்டது என்பது குறித்தும், தண்டாயுதபாணி கோயிலில் மூலவருக்கு தற்போது செய்யப்படும் அபிஷேகத்திற்கு பிறகு, அபிஷேக பொருட்கள் என்ன செய்யப்படுகிறது என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

