தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அபிஷேகமூர்த்தி சிலை தயாரிப்பில் முறைகேடு புகார்: பழனி கோயில் அதிகாரிகளிடம் ஐ.ஜி. விசாரணை

பழனியில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

Updated On :29 மார்ச் 2018, 8:05 pm

பழனியில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கோயில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
பழனி தண்டாயுதபாணி கோயிலில் 2004-ம் ஆண்டு 220 கிலோ எடையில் செய்யப்பட்ட ஐம்பொன்னால் ஆன அபிஷேக மூர்த்தி சிலை வைக்கப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக, அந்த சிலை அகற்றப்பட்டு தனி அறைக்கு மாற்றப்பட்டது. இந்த சிலை தயாரிப்பில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், ஸ்தபதி முத்தையா மற்றும் அப்போதைய கோயில் இணை ஆணையர் கேகே.ராஜா ஆகியோரை கைது செய்தனர். 
இதுதொடர்பாக வியாழக்கிழமை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையில் டிஎஸ்பி, கருணாகரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்ளிட்டோர் பழனி பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொண்டனர். பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் உமா மற்றும் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். காலை 10 மணிக்கு தொடங்கி விசாரணை மாலை 6 மணி வரை நடைபெற்றது. 
அபிஷேக மூர்த்தி சிலைக்காக யாரிடம் இருந்து தங்கம் பெறப்பட்டது என்பது குறித்தும், தண்டாயுதபாணி கோயிலில் மூலவருக்கு தற்போது செய்யப்படும் அபிஷேகத்திற்கு பிறகு, அபிஷேக பொருட்கள் என்ன செய்யப்படுகிறது என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பியதாக கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.