கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஸ்கீம் என்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தால் பிரச்னையில்லை.
ஆளுங்கட்சியின் விருப்பப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தால் அது தேர்தலே அல்ல. முறைப்படி நடந்தால் மட்டுமே அது தேர்தல். கூட்டுறவு சங்க தேர்தல் என்பது வருத்தத்தக்க வகையில் உள்ளது. நடிவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

சென்னையில் 3 தொகுதிகளில் விஜய் இன்று பிரசாரம்!

காங்கிரஸ் வேட்பாளர்கள் புறக்கணிப்பு! கோவையில் திமுகவுக்கு மட்டும் ப. சிதம்பரம் பிரசாரம்!

தொகுதி மறுவரையறை விவகாரம்: இன்று திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


