மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 மார்ச் 2018, 7:11 am

கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் விதித்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஸ்கீம் என்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருந்தால் பிரச்னையில்லை. 

ஆளுங்கட்சியின் விருப்பப்படி கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தால் அது தேர்தலே அல்ல. முறைப்படி நடந்தால் மட்டுமே அது தேர்தல். கூட்டுறவு சங்க தேர்தல் என்பது வருத்தத்தக்க வகையில் உள்ளது. நடிவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.