அதிமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பதிவு புதுப்பித்தலுக்கான கால அவகாசத்தை ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை நீட்டித்து கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவைப் புதுப்பிக்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஜனவரி 29 -ஆம் தேதி முதல் கட்சித் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
கட்சியினர் அவர்கள் பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். தற்போது கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், கட்சியினர் இதற்கான பணிகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, கட்சி உறுப்பினர் பதிவைப் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தலுக்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டுமென கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கவும் கால அவகாசம் ஏப்ரல் 30 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

