புதுதில்லி: நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும், சிபிஎஸ்சிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் என்று பல விதங்களிலும் அலைக்கழிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு தேர்வெழுதச் சென்ற மகனுக்கு துணையாகச் சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார், அதேபோல் சிங்கம்புணரியில் மாணவி ஒருவரின் தந்தையும் மரணமடைந்தார். இது அனைத்துத் தரப்பிலும் பரவலான கண்டனங்களை எழுப்பியது.
இந்நிலையில் நீட் தேர்வில் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசுக்கும், சிபிஎஸ்சிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
யாரும் புகார் கொடுக்காமலே செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தானாகவே முன்வந்து இந்த நோட்டீசை மனித உரிமை ஆணையம் அனுப்பியிருக்கிறது.
இந்த நோட்டீஸுக்கு. இரண்டு தரப்பினரும் விரைவில் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹார்ட்டின் பட டிரைலர்!

கட்டுமான தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகளுக்காக தொடங்கியுள்ள அரசு ஐடிஐயில் நேரடி சோ்க்கை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கு: வடமாநில இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா்







