காவிரி விவகாரம் தொடர்பாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மே 15) நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 15-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க இருந்தன. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அளிக்கப்படும் தீர்ப்புக்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதோடு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மே 16-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதன் காரணமாக திமுகவின் அனைத்துக் கட்சிக்கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டு, மே 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்

நெல்லை அருகே காா் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

