சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொண்டர்களையும் பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

News image
Updated On :14 மே 2018, 8:17 pm

DIN

தொண்டர்களையும், பொதுமக்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் சேலம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்கள்கிழமை தருமபுரி வழியாக காரில் திருப்பதிக்குச் சென்றார். அப்போது, தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் அக் கட்சியினர் ஏராளமானோர் திரண்டு, குண்டல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளித்தனர். 
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: சேலத்திலிருந்து திருமலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். தருமபுரி மாவட்டம் வழியாகச் செல்லும் எனக்கு, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில், மாவட்ட மக்களே திரண்டு வரவேற்பு அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் அன்பின் காரணமாக நடக்கிறது. இந்த அன்பின் மூலம் மகிழ்ச்சி வெளிப்படுகிறது. தமிழக மக்களையும், கட்சித் தொண்டர்களையும் அதிமுக கட்டிக் காக்கிறது என்றார். முன்னதாக, மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.