பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சோத்துப்பாறை அணை நிரம்பியது.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான ஒடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், வராக நதியில் 5 முறைக்கு மேல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டது. அதேநேரம், அகமலை மற்றும் பேரீச்சம் ஏரி பகுதியில் மழை பெய்துள்ளதால், சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, 33 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, 15 நாள்களுக்கு முன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால், அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில், 3 கன அடி தண்ணீர் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீருக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, அணையின் உயரம் - 126.31 அடி, நீர் மட்டம் 126 அடி, நீர்வரத்து - 7 கன அடி, நீர் வெளியேற்றம் - 3 கன அடி, மழையளவு 6 மி.மீ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










