சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

பொதுமக்களிடம் முதலீடு பெற்று மோசடி: நிறுவன நிர்வாகிகளின் முன்ஜாமீன் ரத்து

பொதுமக்களின் முதலீட்டுப் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து

Updated On :6 நவம்பர் 2018, 1:35 am IST


பொதுமக்களின் முதலீட்டுப் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலம் வாங்கித் தருவதாக பொதுமக்களிடமிருந்து ஒரு தனியார் நிறுவனம் முதலீடுகளை பெற்றது. சுமார் 12 லட்சம் பேர், ரூ.1,137 கோடிக்கு மேல் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். முதலீட்டுத் தொகை முதிர்வடைந்த நிலையில் பலருக்கு நிலம் தரப்படாததால் பல்வேறு காவல் நிலையங்களில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சுமார் 3 லட்சம் பேருக்கு ரூ.500 கோடி வரை திருப்பி வழங்கிய இந்த நிறுவனம், பலருக்கு பணத்தை திரும்பத் தரவில்லை. இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக, ஜம்மு - காஷ்மீர் மாநில உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஜனார்த்தனன், உமா மகேஸ்வரன், அருண் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் நிர்வாகிகள் ஜனார்த்தனன் உள்ளிட்ட 3 பேரும் ஆஜராகினர். 
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்காததால் நிர்வாகிகள் 3 பேருக்கும் ஏற்கெனவே வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், மதுரை நீதிமன்றத்தில் 3 பேரும் வரும் 8 -ஆம் தேதி சரணடைய வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.