திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

தீபாவளி பட்டாசு: உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்ற வேண்டும்: துணைமுதல்வர்

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் 

News image
Updated On :6 நவம்பர் 2018, 1:38 am IST


தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் நீதிமன்ற அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் தேவைப்படும் பாடங்களைத் தவிர மற்ற பாடங்களில் இருந்து கேள்விகள் தமிழில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அதனால் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றிபெறும். பருவமழை காலங்களில் பரவி வரும் காய்ச்சல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 
பருவமழை காரணமாக ஏற்படும் சேதங்களை தவிர்க்க அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.