நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது: டிடிவி தினகரன்

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 அக்டோபர் 2018, 11:26 am IST

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
திருப்பரங்குன்றத்தில் மழைக்காலத்தில் ஏற்கெனவே இடைத்தேர்தல் நடந்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் கூறும் காரணம் வினோதமாக உள்ளது. வானிலை மையம் அரசியல் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 

திடீர் என்று ரெட் அலர்ட் விட்டார்கள். நேற்று சென்னையில் மழையே இல்லை. இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்று தலைமைச் செயலர் மூலம் கடிதம் எழுதியுள்ளனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சந்திக்க திமுக பயப்படுகிறது. தற்போதைய அரசு, மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவும் விமர்சித்தார். 

நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா, இல்லை அதிபர் ஆட்சி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. கல்வித்துறையில் நிறைய புகார் வருவதாக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்தார். சாஸ்த்ரா பல்கலைக்கழகம் 59 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுவே அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்தால் குண்டாஸே போடுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.