ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பிரமோற்சவம்: திருப்பதி செல்லும் பழனி மலர்கள்

 திருப்பதியில் நடைபெறவுள்ள இரண்டாவது பிரமோற்சவத்துக்கு பழனியில் இருந்து 7 டன் மலர்கள் அனுப்பும் பணி திங்கள்

News image

பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் திருமலை பிரமோற்சவத்துக்காக திங்கள்கிழமை மலர்கள் அனுப்பும் பணியை தொடக்கிவைத்த சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன்.

Updated On :9 அக்டோபர் 2018, 12:47 am IST


 திருப்பதியில் நடைபெறவுள்ள இரண்டாவது பிரமோற்சவத்துக்கு பழனியில் இருந்து 7 டன் மலர்கள் அனுப்பும் பணி திங்கள்
கிழமை தொடங்கியது.
திருப்பதி திருமலையில் கடந்த செப். 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் 2 ஆவது பிரமோற்சவம் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்காக பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் வண்ண மலர்கள் அனுப்பும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. 
பழனி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு புஷ்ப கைங்கர்ய சபா செயலர் மருதசாமி முன்னிலை வகித்தார். பழனி சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மலர்கள் அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார். 
முதல் நாளான திங்கள்கிழமை மஞ்சள் செவ்வந்தி, ஆரஞ்சு செண்டுமல்லி, வாடாமல்லி, பட்டுப்பூ, வெள்ளை சம்பங்கி, அரளி, மருகு உள்ளிட்ட மலர்கள் சுமார் 700 கிலோ அளவிற்கு அனுப்பப்பட்டது. 
வரும் பதினோரு நாள்களும் சுமார் 7 டன் எடையிலான பட்டுப்பூ, துளசி, தாமரை என பல்வேறு வகையான மலர்கள் அனுப்பப்படவுள்ளன. 
ஏற்பாடுகளை சங்க தலைவர் ஹரிஹரமுத்து, கௌரவ தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.