திருப்பதியில் நடைபெறவுள்ள இரண்டாவது பிரமோற்சவத்துக்கு பழனியில் இருந்து 7 டன் மலர்கள் அனுப்பும் பணி திங்கள்
கிழமை தொடங்கியது.
திருப்பதி திருமலையில் கடந்த செப். 13 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் 9ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் 2 ஆவது பிரமோற்சவம் நடைபெற உள்ளது.
இவ்விழாவிற்காக பழனி புஷ்ப கைங்கர்ய சபா சார்பில் வண்ண மலர்கள் அனுப்பும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பழனி மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு புஷ்ப கைங்கர்ய சபா செயலர் மருதசாமி முன்னிலை வகித்தார். பழனி சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் மலர்கள் அனுப்பும் பணியை தொடங்கி வைத்தார்.
முதல் நாளான திங்கள்கிழமை மஞ்சள் செவ்வந்தி, ஆரஞ்சு செண்டுமல்லி, வாடாமல்லி, பட்டுப்பூ, வெள்ளை சம்பங்கி, அரளி, மருகு உள்ளிட்ட மலர்கள் சுமார் 700 கிலோ அளவிற்கு அனுப்பப்பட்டது.
வரும் பதினோரு நாள்களும் சுமார் 7 டன் எடையிலான பட்டுப்பூ, துளசி, தாமரை என பல்வேறு வகையான மலர்கள் அனுப்பப்படவுள்ளன.
ஏற்பாடுகளை சங்க தலைவர் ஹரிஹரமுத்து, கௌரவ தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: க.கிருஷ்ணசாமி

அக். 7 தாக்குதல் நடத்தியவா்களுக்கு மரண தண்டனை வழங்க இஸ்ரேலில் தனி தீா்ப்பாயம்

மின் மோட்டாா் திருட முயற்சி: ஒருவா் கைது

பிவிஆா் ஐநாக்ஸ் லாபம் ரூ. 186.4 கோடி!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

